முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி, ஜூன் 2- உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறுவதே துணைநிலை ஆளுநரின் வேலை யாக உள்ளது என்று முதல்வர் நாராயண சாமி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து முதல்வர் நாராயண சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் கொரோனா தொற்று பர வலை அரசு தடுத்துள்ளது. இருந்தாலும் அண்டை மாநிலங்களில் இருந்து இங்கு வந்தவர்கள் மூலம் தற்போது தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். தற்போது 9 மணிக்கு கடைகள் மூட அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. எனவே வியாபாரிகள் இரவு 8 மணியி லிருந்தே கடைகளை அடைக்க துவங்க வேண்டும். இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும்.
துணைநிலை ஆளுநர் சமூக வலை தளத்தில், தான் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த காலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களை தீர்த்து வைத்துள்ளதாக உன்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும் போது ஜனநாயகத்தை சிறிதளவும் மதிக்க மால் அவர் செயல்பட்டு வருவது மக்க ளுக்குத் தெரியும். எந்த எந்த புகார்களை அவர் விசாரித்தார் என்று ஆளுநர் தெரி யப்படுத்த முடியுமா? புகார்களை விசாரிக்க அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தனக்கு அதிகாரம் உள்ளது என்று கூறும் துணைநிலை ஆளுநர் பொய்யை மட்டுமே கூறி வருகிறார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து புதுச்சேரி மாநில மக்களின் நல னுக்கு எந்தவித வளர்ச்சியையும் ஏற்படுத்த வில்லை. இதை நான் சொல்லவில்லை மக்களே கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.