தலித் உரிமை உச்சி மாநாடு செவ்வாயன்று (டிச.19) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் பி.வெங்கட் பேசியதன் சுருக்கம்:
ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளின் மக்கள் தொகையை விட, இந்தியாவில் உள்ள தலித் மக்களின் எண்ணிக்கை அதிகம். தலித் மக்களில் 80 விழுக்காட்டினர் விவசாயத் தொழிலாளர்களாகவும், முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 18.8 விழுக்காடு, (சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்) விவசாயத்தின் மூலம் கிடைக்கிறது. எனவே தலித் மக்கள் கையேந்துபவர்கள் அல்ல; உற்பத்தி செய்யக் கூடியவர்கள். எனவே தங்களுக்கான உரிமையை கோருகின்றனர்.
அடம் பிடிக்கும் ஒன்றிய அரசு
அரசியலமைப்பு சட்டத்தை, மதச்சார்பின்மை, சமூக நீதியை பாஜக ஏற்க மறுக்கிறது. மநுவாதம், நால்வருணம், சாதி ஆதிக்கத்தை செயல்படுத்துகிறது. எனவேதான் பாஜக ஆளும் மாநிலங்களில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிக மாக உள்ளது. உ.பி.யில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்த பாஜக அரசு ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரி மைகளை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அமல்படுத்த மறுக்கிறது.
எது வளர்ச்சி ?
சமூகநீதி சார்ந்த வளர்ச்சியை புறந்தள்ளி, மேல்தட்டு வர்க்கத்தின ரின் வளர்ச்சியை வளர்ச்சியாக பாஜக காட்டுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதால் இட ஒதுக்கீட்டின் கீழ் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு பறிபோ கிறது. வேளாண் நிலங்களை கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதால் பொருளாதார ரீதியாகவும் பட்டிய லின மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். தத்துவார்த்த ரீதியாகவும், சமூக, பொருளாதார ரீதியாகவும் பட்டியலின மக்கள் ஒடுக்கப்படுகின் றனர். எனவே, நாடாளுமன்ற தேர்த லில் பாஜகவை வீழ்த்தவேண்டும்.
இந்தியாவில் சுமார் 40 கோடி ஏக்கர் அரசு நிலம் உள்ளது. நில உடமையாளர்கள் குவித்து வைத்து ள்ள நிலங்களை 2-5 ஏக்கர் என பிரித்து பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். கேரளாவில் 96 விழுக்காடு நிலம் பகிர்ந்தளி க்கப்பட்டுள்ளது. 98 விழுக்காடு மக்க ளுக்கு குடியிருப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அது போல உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.