tamilnadu

img

ஆதாருடன் இணைக்கப்படாத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கம்?

ந ிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெறும் அனைவருக்கும் இந்த  பான் எண் வழங்கப் படும் நிலையில்,  வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த் தனை போன்ற நிதி களை தவிர்க்க மக் கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது.

நீண்ட காலமாகவே இதற்கான காலக்  கெடு நீடிக்கப்பட்டு வந்த நிலையில், கடை சியாக 30 ஜூன் 2023-க்கு முன் தங்கள்  பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என்றும், ஜூலை 1 - 2023  முதல் இணைக்கப்படாத பான் எண்  செயலிழக்கும் என வருமான வரித்துறை உறுதியாக தெரிவித்தது. இந்நிலையில் ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தக வல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்  காத பான் கார்டுகளை முடக்கி ஒன்றிய  நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்கை  எடுத்திருப்பதாக தகவல் அறியும் உரிமை  சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது.