சென்னை, பிப்.20- தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதி கரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கோடைக்காலம் முழுமையாக துவங்கும் முன்பே, 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங் கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத் தில் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பிப்ரவரி 20, 21 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22-ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், பிப்ரவரி 23 முதல் 25 தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.