சென்னை, டிச.26 - ஆண்டுதோறும் சட்டப் பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேர வைக் கூட்டம் வரும் ஜனவரி 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தொடரின்போது அரசு தயாரித்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு வாசித்தார். இதனால் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் உருவானது. ஆளுநரின் செயலை பல்வேறு கட்சி கள் கண்டித்தன. சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மீது வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசுடன் ஆளுநர் ஒத்துப் போக வேண்டும். இது சம்பந்தமாக முதலமைச்சரு டன் பேசி தீர்வு காண வேண் டும் என்று அறிவுறுத்தினர்.
இந்த சூழலில் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசுக்கு அனுப்பி விட்டார். அதன் பிறகு முதல மைச்சருடன் பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள நிவாரண பணிகளில் ஈடு பட்டு இருந்ததால் பேச்சு வார்த்தைக்கு செல்ல வில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யின் 2024 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்திற்கு ஆளுநர் அழைக்கப்படுவாரா? அல்லது ஆளுநர் உரை இல்லாமல் பேரவைக் கூட்டம் நடைபெறுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.