tamilnadu

img

புதிய நாடாளுமன்ற திறப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமெனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசுகின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
  வருகின்ற மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த நிலையில் குடியரசுத்தலைவரைத் திறப்புவிழா நிகழ்விற்கு ஒன்றிய அரசு அழைக்காததைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள 19 எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவினை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. 
  இதனைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புதிய நாடாளுமன்றத்தைக் குடியரசுத் தலைவரே திறந்து வைக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்திருந்தார்.
  இந்த மனுவுக்கான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, திறப்பு விழா விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த பொதுநல வழக்கை விசாரிக்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.