tamilnadu

ஓபிஎஸ் மகனுக்கு எம்.பி., பட்டம் சூட்டி சர்ச்சைக்குரிய கல்வெட்டு வைத்தவர் கைது

தேனி, மே 18-தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள கல் வெட்டில்முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை இருட்டடிப்பு செய்து ஜெயலலிதாஎன்றும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் பேஸ்புக் மற்றும்வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எனகல்வெட்டில் பெயர் போட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கல்வெட்டில் ரவீந்திர நாத்குமார் பெயர் மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.ரவீந்திர நாத்குமார் பெயர் இடம் பெற்ற கல்வெட்டை வைத்தது கோவில்நிர்வாகியும்,முன்னாள் போலீஸ்காரருமான வேல்முருகன் என்பது தெரியவந்தது. இதனிடையே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் சார்பாக அவரது தேர்தல்முகவர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையிலான அ.தி.மு.க வழக்கறிஞர் அணியினர் தேனி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனைசந்தித்து புகார் அளித்தனர். இதைதொடர்ந்து கல்வெட்டுவைத்த முன்னாள் போலீஸ் காரர் வேல்முருகன் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.