tamilnadu

img

திறக்கப்படாமல் பாழாகும் பள்ளிக் கட்டிடம்

 விழுப்புரம், செப்.9- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட் பட்ட பாப்பனபட்டு ஊராட்சியில் கடந்த 2006-2007 ஆம் ஆண்டு  மக்களவை உறுப்பினராக இருந்த கோ.தன்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. எந்த பயன்பாட்டுக்கு கட்ட;பபட்டதோ அந்த பயன் பாட்டுக்கு இன்றுவரைக்கும் பயன்படாமல் சமூக விரோத  செயல்பாடுகளின் கூடாரமாக மாறிவிட்டது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக பயன் பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“ அரசு  திட்டங்கள் செயல்படுத்தும் போது அந்த திட்டம் பயன்ப டும் இடங்களில் அமைக்கப் படுவதில்லை. ஏதோ கடை மைக்காக செய்து முடித்துவிடுகிறார்கள். இது போன்ற நடவ டிக்கையால் அரசு நிதி மக்களின் பயன்பாட்டுக்கு பயன் படாமல் வீணாகி வருகிறது” என்றும் குற்றம் சாட்டினர்.