tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சொல்கிறது. ஆனால் அதே ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு விவசாய உற்பத்தி 1.2 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறுகிறது. இதிலேயே முரண்பாடு வெளிப்படுகிறது. விவசாயத்துறை தான் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆனால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கியிருக்கிறது என்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆபத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும். இன்னும் குறிப்பாக இந்த காலகட்டத்தில் அதிகமான பரப்பளவின் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்ட போதிலும் 3.7 சதவீதம் நெல் உற்பத்தி சரிந்துள்ளது. உடனடியாக இதை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை  மோடி அரசு மேற்கொள்ள வேண்டும்.வெற்று டம்பப் பேச்சு நிறுத்த வேண்டும்.