சென்னை,ஆக.30-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 6,398 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து 4,293 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் புதனன்று தண்ணீர் திறப்பு 6,398 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,398 கனஅடியும் கபினி அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. புதனன்று காலை நிலவரப்படி வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,398 கன அடியாக உள்ளது.