தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 28,29,30 ஆகிய வட்டங்களில் உள்ள பெரியார் தெரு, செல்லியம்மன் நகர் , இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றிட நோட்டீஸ் கொடுக்க வந்த அதிகாரிகளை் பொதுமக்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி (முன்பு பல்லாவரம் நகராட்சி) பகுதியில் நியூகாலனி 13 வது குறுக்குத்தெரு வழியாக வீரராகவன் ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதாக சாலமன் ராஜா என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பசுமை தீர்ப்பாயம் வழக்காக எடுத்துக்கொண்டது.(வழக்கு எண்.134/2021).
மேற்படி புகாரில் கழிவுநீரும், மலக்கழிவுகளும் வீரராகவன் ஏரியில் கலந்து துர்நாற்றம் வீசுவதால். மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் வழக்கில் கண்டுள்ள வீரராகவன் ஏரியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பல்லாவரம் நகராட்சி மற்றும் திருநீர்மலை பேரூராட்சி அதிகாரிகளுக்கும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தயாரித்து பல்லாவரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளின் காரணமாக கழிவுநீர் கலப்பதாகவும் ஏரியை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் கலப்பதாகவும், ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடியை பல்லாவரம் நகராட்சி மற்றும் திருநீர்மலை பேரூராட்சி ஆகியவை அப்புறப்படுத்த இருப்பதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு நகராட்சிகள் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கழிவுநீர் மற்றும் மலக்கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் வழக்கை திசைதிருப்பும் நோக்கோடு, வழக்கிற்கு சம்பந்தமில்லாத ஏரியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு Tamilnadu Protection of Tanks and Eviction Encroachment Act 2007 சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் என கருதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கில் தாம்பரம் மாநகராட்சி மன்றத்தில் வழக்கறிஞர் வழக்கத்திற்கு சம்பந்தமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக அறிகிறோம்.
வழக்கு எண்.134/202 ஏரியில் கழிவுநீர் கலக்க கூடாது என்பது, எனவே, மேற்படி வீரராகவன் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள புல எண்.391 என்பது 120 ஆண்டுகளுக்கு முன்பு தரிசு புஞ்சை (DV) என்று இருந்ததை 1985-ல் நீர்பிடிப்பு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் வகை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 391 புல எண் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தால் குடியிருப்பு பகுதி என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது (CMDA IC002333/2006 Dated 13.12.2006).
மேற்படி சர்வே எண்.391, 392 ஆகியவைகளில் உள்ள வீடுகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த ஏரியின் கீழ்பகுதியில் பாசன பகுதிகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் ஏழைஎளிய தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தவிர்த்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் கழிவுநீர் ஏரியில் கலக்காமல் இருக்கவும். ஏற்கனவே உள்ள கழிவுநீரை அகற்றியும், ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரை சேரிக்கவும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என 13.07.2022 அன்று வரவுள்ள இந்த வழக்கில் உறுதிமொழி அளித்து 28, 29, 30 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும்படி ஒன்று பட்ட மக்களின் போராட்டத்தின் ஒற்றுமையால் அதிகாரிகள் செய்வதறியாது திரும்பிசென்றனர்.
இந்த போராட்டத்தில் சிபிஐஎம்,திமுக, மதிமுக உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் . திமுக சார்பாக பரங்கிமலை ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் மாவை.மகேந்திரன், சிபிஐஎம் சார்பாக மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், தொகுதி் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.