tamilnadu

img

பயன்படுத்திய முகக்கவசங்களை சாலையில் வீசும் பொதுமக்கள்

விழிப்புணர்வு இல்லாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம்

செங்கல்பட்டு, ஜூன் 10- பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை பாதுகாப்பற்ற முறையில் சாலை களில் வீசி எறிகின்றர். இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பர வலை தடுக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பொதுமக்க ளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில்  முக்கியமானது முகக் கவசம் அணிவது. இதை அரசும் கட்டாய மாக்கியுள்ளது. அதன்படி, பெரும்பகுதியான மக்கள் தொற்றிலிருந்து தங்கள் காத்துக் கொள்ள முகக் கவசம் அணி கின்றனர். அதேசமயம் பயன்ப டுத்திய அந்த முகக் கவசங்களை மருத்துவ முறையில் அகற்றுவ தில்லை. இதனால் கொரோனா மட்டு மின்றி மற்ற நோய்த் தொற்றுக்களும் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தும் முகக் கவசங்களைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆங்காங்கே சாலையிலும், பொது  இடங்களிலும் வீசி எறிகின்றனர். இவ்வாறு வீசப்படும் முகக் கவசங்க ளைத் துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்தும் நிலை உள்ளது.  இதனால் துப்புரவுத் தொழிலாளர்க ளுக்கு பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் மக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை போடுவதற்கு பிரத்யோகமான குப்பைத் தொட்டிகள் ஏதும் இல்லை. எனவே, ஆங்காங்கே கழற்சி  தூக்கியெறியும் நிலை உள்ளது. இதனால் பார்க்கும் இடமெங்கும் பயன்படுத்திய முகக் கவசங்களாகக் கிடக்கின்றன. இதுமட்டுமின்றி செங்கல்பட்டு நகர சாலைகளிலும், மருத்துவ மனை வளாகங்களிலும் இந்த நிலையே உள்ளது. மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் மற்றுமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பயன்படுத்திய முகக்  கவசங்கள், கையுறைகள் போடுவ தற்கு பிரத்யோகமான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் எனச் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.