பிரதமர் முத்ரா திட்டத்தின்கீழ் இதுவரை 44.46 கோடி எண்ணிக்கையிலான ரூ.26.12 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளு மன்றத்தில் நிதியமைச்சர் (18.12.2023 அன்று) பதில் அளித்திருக்கிறார். இதில் 30.64 கோடி எண்ணிக்கையிலான கடன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரி வித்திருக்கிறார்.
இந்தியாவின் மக்கள் தொகை சற்றேறக்குறைய 143 கோடி. அதில், 15 வயதுக்கு மேல், 65 வயது வரை உள்ளவர்கள் சுமார் 67.49 சதவீதம்தான். (15 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 25.68 சதவீதம்.) 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் கடன் என்பதால், கடன் பெறத் தகுதியானர்கள் 60 சதவீதம் என்று வைத்துக்கொண்டால்கூட, அது ஏறத்தாழ 86 கோடி. இதிலும்கூட அரசுப் பணி, தனியார் பணி என்றெல்லாம் இருந்து, தனியாகத் தொழில் செய்யாதவர்களைக் கழித்தால், இந்த எண்ணிக்கை 80 கோடிக்கும் கீழே சென்றுவிடும்.
86 கோடி என்றே வைத்துக்கொண்டால்கூட, 44.46 கோடிப் பேருக்கு முத்ரா கடன்கள் வழங்கப் பட்டுள்ளன என்பதற்கு, மக்களில் பாதிக்கும் அதிக மானவர்களுக்கு, அதாவது, இருவரில் ஒருவருக்கு இக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று பொருள்.
இந்திய மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு 944 பெண்கள் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடன் பெறத் தகுதியான வயதுள்ள பெண்களும் அந்த விகிதத்திலேயே இருப்ப தாக வைத்துக்கொண்டால், அவர்கள் சுமார் 41 கோடி. 30.64 கோடிப் பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கியுள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். அதாவது, நம்மைச் சுற்றியுள்ள 3இல் இருவருக்கும் அதிகமான பெண்கள் இக்கடனைப் பெற்றுள்ள தாகப் பொருள்.
ஆனால், நம்மைச் சுற்றியுள்ள, அரசுப் பணி அல்லது தனியார் பணியில் இல்லாதவர்களை விசாரித்தால், அப்படிக் கடன் கிடைத்ததாகத் தெரிய வில்லை. முத்ரா கடன் திருப்பிச் செலுத்தும் காலம் ஒன்றிலிருந்து 7 ஆண்டுகள் என்று அதற்கான அரசின் இணைய தளம் தெரிவிக்கிறது.
2015 ஏப்ரலில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நிதியமைச்சர் பதிலில் குறிப்பிட்டுள்ள 2023 நவம்பர் 24 வரை ஏறத்தாழ எட்டரை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதனால், கடன் பெற்று, திருப்பிச் செலுத்தியவர்களுக்கே மீண்டும் மீண்டும் வழங்கினோம் என்று அரசு விளக்கம் அளிக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியெல்லாம் கணக்கிட்டால்கூட, 4 அல்லது 5இல் ஒருவருக்கா வது கடன் வழங்கினால்தான் இந்த எண்ணிக்கை சாத்தியம் என்று தோன்றுகிறது. ஆனால், அப்படி வழங்கப்பட்டிருப்பதாகக் கள நிலவரம்காட்டவில்லை.