தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டு போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் ஜி.மணி தலைமையில் வாயில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் உதயகுமார், ஆலை மட்ட செயலாளர் பாலமுருகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செல்வன், சிஐடியு நிர்வாகி தண்டபாணி உள்ளிட்டோர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.