tamilnadu

பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

சென்னை,ஏப். 27 தமிழகம் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கடற்கரை பகுதி, தேவாலயங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, புதுச்சேரி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று (ஏப். 27) பயணிகளின் உடமைகள், பார்சல் உள்ளிட்டவற்றை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர்.திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கோவிலின் பின்புறம் உள்ள கோபுரத்தின் வழி மூடப்பட்டுள்ளது. ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் என 3 கோபுரங்கள் வழியாக தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக் கப்படுகின்றனர். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

;