tamilnadu

img

விண்வெளிக்கு அடுத்தாண்டு மனிதர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை,ஜன.8- சென்னையில் நடைபெற்ற உலக  முதலீட்டாளர் மாநாட்டில், விண்வெளி,  பாதுகாப்பு துறைகளில் உள்ள வாய்ப்பு கள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:- சந்திரயான் - 2 தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, தொழில்  நுட்பத்தில் பல மாற்றங்களை கொண்டு  வந்தோம்.

அதனால் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி அடைய  முடிந்தது. உலகிலேயே இந்தியா தான், மிகக் குறைந்த செலவில் ராக்கெட்  அனுப்புகிறது. ஹார்டுவேர் பயன் பாட்டை குறைப்பது இதற்கு காரணம். சந்திரயான் - 3 வெற்றி, இந்திய  மக்களின் இதயங்களில் உணர்ச்சிகர மான தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் எதையும் சாதிக்க முடியும்  என்ற நம்பிக்கையை விதைத்து.

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இந்திய இளைஞர்களை தொழில் நுட்பம் நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக, சந்திரயான் வெற்றிக்குப் பின், விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை படிக்க, இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்வித்துறையில் மட்டுமல்லாது, ஏராளமான தொழில் வாய்ப்புகளும் இஸ்ரோவின் வெற்றியை உருவாக்கி யுள்ளது. விண்வெளி துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலம், 2025 இல் அனுப்பப்படும்.

இத்திட்டத்தில் மனித  ரோபோவை அனுப்பும், ‘வியோமித்ரா’  திட்டமும் அடங்கும். தூத்துக்குடி மாவட்டம், குலசே கரப்பட்டினத்தில் அமைந்துள்ள இடம், சிறிய வகை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப பொருத்த மானதாக இருக்கும். எனவே, அங்கு  அடிக்கல் நாட்டப்பட்டது, இரண்டு  ஆண்டுகளில் அங்கு ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதுவே சரியான தருணம்: ரகுராம்ராஜன்
 ‘தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உரையாற்றுகையில், “ முதலீட்டுக்கான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட இதுவே சரி யான தருணம். சுற்றுலாத் துறையில் அதிக தொழில் வாய்ப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பொறி யாளர்களும், உயர்கல்வி படித்த வர்கள் இருக்கின்றனர். எனவே, நாம் உற்பத்தித் துறை மட்டுமின்றி இதர துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

ஒரு டிரில்லியன் டாலர் சாத்தியமே
ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பேசுகையில், “சீனாவின் உலகளாவிய ஏற்றுமதி 40 விழுக்காடு. ஆனால், இந்தியாவின் ஏற்றுமதி 4 விழுக்காடு மட்டுமே உள்ளது” என்றார். 

கடந்த 6 மாதங்களாக தமிழ் நாட்டில் தொழில் துறை மற்றும் முதலீட்டுக்கான சூழல் மிகச்சிறப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். ஏராள மான முதலீடுகள் வருகின்றன. தமிழ்நாட்டில் 30,000-க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்படுவது இதுவரை நிகழாத ஒன்று. இது போன்ற அம்சங்களால் ஒரு டிரில்லி யன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள்  ரூ.31,000 கோடி முதலீடு
சிங்கப்பூர் நாட்டின் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய இந்தியா வுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்,“ எங்கள் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து துறை களிலும், வளர்ச்சி அடைந்துள்ளது” என்றார்.

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பசுமை மின்சாரம், ஐ.டி.,  பார்க், பசுமை கட்டடம் போன்றவற்றை  உள்ளடக்கிய பசுமை திட்டங்களுக்காக தமிழ்நாட்டில் ரூ. 31,000 கோடிக்கு முதலீடு செய்கின்றன.

இது, மிகப் பெரிய முதலீடாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை 40 லட்சம் மாணவர்கள் கைப்பேசி இணையவழி இணைப்பின் மூலம் பார்த்துள்ளனர்.