tamilnadu

வேலை தருவதாக மோசடி செய்தவர் கைது

சென்னை, டிச.9- சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்த நிலை யில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  இண்டிகோ நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் ஒன்றை கண்டுள்ளார். பின்னர் அதில் குறிப் பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனை யில் பேசிய நபர் தனது பெயர் அலெக்ஸ்  பாண்டியன் என்றும் இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தரு வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வேலைக்கு ரூ.1.25 லட்சம்  பணம் கட்ட வேண்டும் என கூறியதை  நம்பி தினேஷ் பணத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு பணி ஆணை கொடுத்துள்ளார். பிறகு அது போலி என்று தெரியவந்தது. இது குறித்து அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை தில்லில் கைது செய்து சென்னை கொண்டுவந்தனர்.