tamilnadu

4 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது

சென்னை, ஏப்.22- தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் கடந்த 18 ஆம் தேதிநடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதிதவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுநடந்தது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.இதேபோல், மே 19ஆம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் திங்களன்று(ஏப்.22) தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29 ஆம் தேதியாகும்.மனுக்கள் மீதான பரிசீலனை 30 ஆம் தேதி நடக்கிறது. மே மாதம் 2 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலை 4 மணியோடு முடிவடைகிறது. அதன்பின்னர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 ஆ ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. 

;