சென்னை,ஜன.12- தமிழ்நாடு அரசின் அயல கத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடை பெற்றது. இதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் வெள்ளிக்கிழமை (ஜன.12) இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின், “எனக்கு உடல் நலமில்லை, உற்சாக மில்லை என்று ஒரு பத்தி ரிகையில் எழுதியிருந்தார் கள்.
அதைப் படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. அதைவிட எனக்கு வேறு என்ன குறை இருக்க போகிறது”என்றார்.
எனக்கு மக்களை பற்றி தான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். தனது சக்தியை மீறி உழைப்பவன் நான். எனவே இதுபோன்ற செய்திகளை ஒதுக்கிவிட்டு மக்களுக்கே உழைப்பேன் என்று அவர் கூறினார். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற உழைப்பு திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றி கரமாக வாழ காரணம்.
இப்படி புலம்பெயர்ந்த தமிழ் சொந்தங்கள் அந்த நாடு களின் வளர்ச்சிக்கு உயர்வுக் கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள் என்றும் முதல்வர் தெரி வித்தார். புலம்பெயர்ந்த தமிழர் கள் தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ‘எனது கிராமம்’ திட்டம் தொடங்கப்பட்டிருக் கிறது. எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர் பாபு, ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், கா.ராமச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.