tamilnadu

தீயில் எரிந்து சிறுவன் மர்ம மரணம்

திருவண்ணாமலை, ஏப். 13-திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் ஏரியில் தீயில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் கண்டெடுக் கப்பட்டள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் வெள்ளியன்று கருப்பு புகை வந்தது. இதையறிந்த அப்பகு தியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து அவர்கள் வேட்டவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வந்து பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.சிறுவனுக்கு 12 வயது இருக்கும். அவனின் தலை, முகம், உடல், கால்கள் கருகிய நிலையில் கிடந்தது. சிறுவன் மீதும் அவனை சுற்றியும் கோழிகளின் இறகு கழிவுகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. பிணம் எரித்திருந்த சிறிது தூரத்தில் மண்ணெண்ணை கேன் வீசப்பட்டு கிடந்தது. எனவே சிறுவனை யாரோ எரித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி மற்றும் காவல் உயரதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். பிணத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;