சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
வருமானத்துக்கு அதிக மாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற சென்னை உயர்நீதி மன்றம் நிர்வாக உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி வழக்கை விசாரித்த வேலூர் நீதி மன்றம், அமைச்சர் பொன் முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, மறுஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன் முடி மற்றும் அவருடைய மனைவியை விடுதலை செய்து வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூனில் பிறப்பித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆக.10-ல் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண் டார்.
இந்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தை சமர்ப்பித் திருந்தார். இந்நிலையில், வேலூர் நீதிமன்ற நீதிபதி யின் விளக்க மனுவின் நகலை வழங்க கோரி பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ெஜயச்சந்திரன், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டார்.
அதேபோல், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில், வழக்கை விழுப்புரம் நீதி மன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உயர்நீதிமன்றம் நிர்வாக ரீதியில் எடுத்த முடிவு தொடர் பான ஆவணங்களை வழங்க கோரியும், உயர் நீதிமன்ற தலைமை பதி வாளர் வழக்கில் எதிர் மனு தாரராக சேர்க்க கோரியும் பொன்முடி தரப்பில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டி ருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ெஜயச்சந்திரன், தலைமைப் பதிவாளர் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். அதேபோல், வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற எடுத்த முடிவு தொடர்பான ஆவணங் களை வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.
அப்போது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு ஜூன் 6 ஆம் தேதி முதல் நேர்த்தியாக நகரத் தொடங்கியது என்றும், ஜூன் 23 இல் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யப்பட்ட 4 நாட்களில், ஜூன் 28ல், 172 சாட்சிகள், 381 ஆவணங்களுடன் 226 பக்க தீர்ப்பில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த உள்ளதாகவும் சுட்டிக்காட்டி யிருந்தார்.
இந்நிலையில், இவ் வழக்கை செவ்வாயன்று (டிச.19) விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி அமைச்சர் பொன்முடியின் விடுதலை யை ரத்து செய்து உத்தர விட்டார். பொன்முடி 64.90 விழுக்காடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த் தது நிரூபணம் ஆகியுள்ளது கூறினார்.
தண்டனை விவரங்களை வியாழக்கிழமை(டிச.21) தேதி காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். அன்றைய தினம் பொன்முடி, விசா லாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலம் ஆஜராக நீதிபதி ஜி. ஜெயச் சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.