tamilnadu

img

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மாநாடு துவங்கியது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு) 10-வது மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வெள்ளியன்று (பிப்.16) பேரணி பொதுக்கூட்டத்துடன் துவங்கியது.  திருவள்ளூர் மாவட்ட தலைவர் பி.கதிர்வேல்  தலைமை தாங்கினார். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன்,  மாநில பொதுச் செயலாளர்  ஜி.சுகுமாறன், துணை பொதுச் செயலாளர் வி.குமார், துணைத்தலைவர் கே.விஜயன், சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன், சிஐடியு மாநில செயலாளர் கே.ரங்கராஜ்,  சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.சீனிவாசலு, சிஐடியு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர். பிரநிதிகள் மாநாடு சனிக்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.