தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் மார்ச் 9ஆம் தேதி மீண்டும் கூட உள்ளதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. 2020 -21 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த 14ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார் அதன் பிறகு நடந்த 17ஆம் தேதி மீண்டும் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் இருபதாம் தேதி வரை நடைபெற்றது இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் மார்ச் ஒன்பதாம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார் இதில் பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் அப்போது துறை ரீதியான பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.