சென்னை, மார்ச் 9 - திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கி ரஸ் கட்சிக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை அறிவாலயத்தில், சனிக் கிழமையன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந் தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
காங்கிரஸ் தரப்பில் பொதுச்செய லாளர் கே.சி. வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், மூத்தத் தலைவர் முகுல் வாஸ்னிக், சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டுக் குழு நிர்வா கிகள் டி.ஆர். பாலு, க. பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திருச்சி என். சிவா, டி.கே.எஸ். இளங் கோவன், தலைமை நிலையச் செயலா ளர் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தையில் இடம்பெற்றனர். இதன்மூலம் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மக்களவைத் தேர்த லுக்கான தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக, பாஜக தங்களின் கூட்டணியையே இன் னும் இறுதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக அணியில் கூட்டணிக் கட்சிகள் போட்டி யிடும் இடங்களின் எண்ணிக்கை தீர்மா னிக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு உடன் பாடு விரைவாகவும், சுமூகமாகவும் முடிந்துள்ளது. பிப்ரவரி 24 அன்று இந்தியன் யூனி யன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு இராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 29 அன்று நடை பெற்ற பேச்சுவார்த்தை முடிவில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. வெள்ளியன்று (மார்ச்8) விடு தலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்ப ரம், விழுப்புரம் ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மதிமுகவுக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, சனிக்கிழமை யன்று காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதியையும் சேர்த்து 10 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழகம் - புதுச்சேரி யைச் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகு திகளில் 19 தொகுதிகளை தோழமைக் கட்சிகளுக்கு திமுக பகிர்ந்தளித்துள் ளது.
எந்தெந்த தொகுதிகள் என்ற விப ரம் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், ஐயு எம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு எண்ணிக்கை மட்டுமல்லாமல் இடங்க ளும் அடையாளம் காணப்பட்டு, அவை ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட் சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதி களில் புதுச்சேரி மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சிபிஎம், சிபிஐ, மதி முக ஆகிய கட்சிகளுக்கான எண் ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த இடங்கள் என்பது ஞாயிறு அல்லது திங்கட்கிழமைக்குள் இறுதி செய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கூட்டணியில் புதிதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. (செய்தி-3)