ஒன்றிய அரசின் சார்பில் வராணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காச நோயை ஒழிக்க தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டி மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க.ஸடாலினிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறையின் முதன்மை செயலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் உள்ளிட்டோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.