சென்னை:
தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்ட 43 வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு களை மட்டும் எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18 அன்று நடை பெற்றது. அப்போது, 46 வாக்குச் சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவின்போது சில குளறுபடிகள் நேர்ந்தன. வாக்கு இயந்திரத்திலோ ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திலோ அல்லது இரண்டிலுமோ பதிவான மாதிரி வாக்குப் பதிவுகளை அழிக்கத் தவறியது தொடர் பாக குளறுபடிகள் நேர்ந்தன.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாகு, தேர்தல்ஆணைய தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இதில் 3 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணைம் உத்தரவிட்டது.மற்ற 43 வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக் கையின்போது ஒப்புகைச் சீட்டுகளை மட்டும் எண்ணி சரிபார்க்குமாறு தேர்தல்ஆணையம் உத்தர விட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.