tamilnadu

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை, மே 14-பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் தடையை மீறி படகு சவாரி தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், ஞாயிறன்று (மே 14) படகு சவாரிக்கு 10-க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்றபோது 2 படகுகள்ஒன்றோடொன்று மோதின.இதில் நிலைதடுமாறி படகு கவிழ்ந்ததில் காசிமேட்டை சேர்ந்த ஜான் என்பவரது மனைவி மேரி பலியானார். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், நடுவூர் மாதாகுப்பத்தை சேர்ந்த 3 பேரிடம் விசாரித்துவருகின்றனர்.இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஒ. நந்தகுமார் கூறுகையில், பழவேற்காட்டில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் தடையைமீறி படகு சவாரி செய்தால் படகு ஓட்டுநர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது படகு பறிமுதல் செய்யபடும். அங்கு ரோந்துப்பணியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள். படகு சவாரியை தடுக்க கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சனி, ஞாயிறு இதுகுறித்து மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். 

;