tamilnadu

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொங்கலுக்கு முன்பு திறக்க முடிவு

சென்னை, அக்.30- சென்னையில் போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. ரூ.400 கோடி செல வில் நவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் அமைகிறது.

திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு பெய்த கனமழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் பேருந்து  நிலையம் முன்பு குளம் போல் தேங்கியது.  இதைத்தொடர்ந்து மழைநீர் கால்வாய் புதிதாக அமைத்த பின்னர் பேருந்து நிலை யத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் இணைப்புச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகள் முடியாததால் தீபாவளிக்கு முன்பு திட்டமிட்டபடி புதிய பேருந்து நிலையத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே மழைநீர் வடிகால்வாய் மற்றும் இணைப்பு சாலை பணிகளை அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அதிகாரி கள் ஒப்பந்ததாரர்களுக்கு கெடு விதித்துள்ள னர். பணிகள் விரைவில் முடிக்கப்படும் பொங்கலுக்கு முன்பு பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.