tamilnadu

img

எம்பிபிஎஸ் மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்.18 வரை கால அவகாசம்  

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகள் சேருவதற்கான அவகாசம் பிப்.18 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறுகையில், மருத்துவக் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் அல்ல. பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி வரை  அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கும்.

மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 7.5 % உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களில் 544 மாணவர்களில் 541 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என இவ்வாறு அவர் தெரிவித்தார். 

;