tamilnadu

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை,ஜன.31- நடிகைகளை விமர்சித்த விவகாரத் தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ. 1  லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. திரைக் கலைஞர் திரிஷா குறித்து  சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத் தில், தான் பேசிய முழு வீடியோவை யும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகி யோருக்கு எதிராக தலா ரூ. 1 கோடி  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர அனு மதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடை யாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, இது குறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை (ஜன.31) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதி பதி முன்பு ஒப்புக்கொண்டு, கால  அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது  அதனை எதிர்த்து எப்படி மேல்முறை யீட்டு வழக்கு தொடர முடியும் என்று  கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தனர்.

அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத் தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்க லாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசார ணையை பிப்ரவரி 7க்கு தள்ளி வைத்தனர்.