இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் மறைவுக்கு செங் கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள் ளது.
இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலை வரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர். என்.சங்கரய்யா (102) இன்று (15.11.2023) சென்னையில் மருத்துவ மனையில் காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.
சிறு வியாபாரக் குடும்பத்தில் 1921-ஆம் ஆண்டு பிறந்த தோழர் என்.சங்கரய்யா பள்ளி மாணவப் பருவத்தில் நாட்டின் விடு தலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பயின்ற காலத்தில் மாண வர்களைத் திரட்டி போராடுவதில் பொது வாழ்வை தொடங்கினார். மதுரை மாண வர் சங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்தவர். இந்த அமைப்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றமாக உருவாக்கப்பட்ட போது அதன் முதல் மாநிலச் செயலாளராக பணியாற்றியவர்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத்திலும், சுற்று வட்டாரத்தி லும் கட்சி அமைப்புகளையும், விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர்களை யும் அமைப்புரீதியாக திரட்டி போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைச் சென்றவர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) மாநிலச் செயலாளராக பணியாற்றிய தோழர் என்.சங்கரய்யா, தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு பெற்று, சிறப்பாக செயல்பட்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் செயல்பட்ட வர்.
பொது வாழ்வுப் பணியில் முன்னோடி யாக திகழ்ந்து வந்த தோழர் என். சங்கரய்யா வுக்கு தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.
சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொதுவாழ்விற்கு முன்னுதாரண மாக திகழ்ந்த தோழர் என்.சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ் வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலை வருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள் கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.