சென்னை, மார்ச் 9- கலைஞரின் கனவு இல் லம் திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு உட னடியாக வீடு வழங்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப் பித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு: கடந்த 2000-ஆம் ஆண் டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்ம ஸ்ரீ சின்னப்பிள்ளை.
அவர் சமீபத்தில், செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி யில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங் கப்படும் என்று சொல்லப்ப டது. ஆனால், இதுவரை வழங் கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பத்ம ஸ்ரீ சின் னப் பிள்ளைக்கு புதிதாக வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி யருக்கு அறிவுறுத்தினார். அதன்படி பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு ஏற்கெ னவே அரசால் வழங்கப்பட்ட ஒரு சென்ட் வீட்டுமனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திரு விழாப்பட்டி கிராமத்தில் கூடு தலாக 380 சதுர அடி நிலத் திற்கு பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள் ளைக்குப் புதிய வீடு வழங் கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங் கப்படும் என முதல்வர் ஸ்டா லின் அறிவித்துள்ளார்.
முதல்வருக்கு நன்றி இதையடுத்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகை யில், ‘எனக்கு என்று சொந்த வீடு எதுவும் கிடையாது. தற் போது என்னுடைய மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான இந்த வீட்டில் தான் வசித்து வருகிறேன். மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவ ருக்கு ரொம்ப நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் தெரி வித்தார்.