சிதம்பரம், மார் 20- கடலூர் மாவட்டம் சிதம் பரம் நடராஜர் கோவிலில் கொரானா வைரஸ் எதி ரொலியாக கடந்த 3 நாட்க ளாக மருத்துவ ஆய்வுக்கு உட்பட்டு பக்தர்களை அனு மதித்து வந்தனர். இந்நி லையில் வைரஸ் தாக்கம் இந்தியாவில் முன்னேறி வருவதால் மாவட்ட நிர்வா கம் சார்பில் 10 பேருக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள அனைத்து வணிக நிறு வனங்களையும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. அதே போல் கோயில், தேவால யம், மசூதி என அனைத்து மக்கள் கூடும் இடங்களை யும் மூட வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து வெள்ளிக் கிழமை காலை முதல் சிதம் பரம் நடராஜர் கோயிலின் அனைத்து கதவுகளையும் மூட உத்தரவிட்டனர். கோவில் உள்ளே தீட்சி தர்கள் பூஜை செய்து கொள் ளலாம். தீட்சிதர் குடும் பத்தைச் சார்ந்தவர்கள் அவர்களது கட்டளை தாரர்கள் என யாரும் உள்ளே செல்லக்கூடாது என சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா மருத்துவர்கள் ஆகியோர் அறிவுறுத்தினார்கள். இதனால் வெளியூர்களி லிருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். மேலும் வரும் 31ஆம் தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு யாரும் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.