கார்ப்பரேட் மதவாத கூட்டணி கொள்ளை மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு 10.57 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2012-2013 முதல் 15.32 லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த தள்ளுபடிகளை தள்ளுபடி அல்ல என்று மோடி அரசு வாதிடுகிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களில் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் 18.6 சதவீத கடன்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜாதி பாகுபாட்டின் கொடூரமான உண்மை. ஐஐடி மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து தலித்,பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 13,626 மாணவர்கள் வெளியேறியுள்ளனர் என நாடாளு மன்றம் தெரிவித்துள்ளது. இது சாதி பாகுபாட்டின் கொடூரமான உண்மையாகும்.அதிகரித்து வரும் சாதிவெறி/தீண்டாமை சம்பவங்கள் தற்கொலை களிலும் பங்கு வகிக்கின்றது,இது ஏற்றுக்கொள்ள முடியாதது.