“அன்புமணி ராமதாஸின் பேச்சை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரது மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் வேலை செய்ய கூட பூத் கமிட்டி ஆட்கள் இல்லை. இந்த மனவிரக்தியில் அதிமுகவை பற்றி அன்புமணி பேசி வருகிறார். இதுதான் களநிலவரம். அப்படிப்பட்ட நிலையில் பாமக, அதிமுகவை தாங்கியது என்று சொல்வது கேலிகூத்து” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.