குடியுரிமை திருததச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 30ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிரோடு இருந்திருந்தால் இந்த சட்டத்தை எதிர்த்திருப்பார்கள் என்பதை சித்தரிக்கும் வகையில், மேடையில் கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா போல் வேடமணிந்து இருந்தனர்.