சென்னை,செப்.20- வி.ஐ.டி சென்னையில் ஆறாவது ஆண்டு தொழில்நுட்ப விழாவான டெக்னோவிட் ‘19 வியாழக்கிழமை தொடங்கியது. இந்த விழாவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் துவக்கி வைத்து மாநாட்டு இதழையும் வெளியிட்டார். விஐடி யின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் விழாவிற்கு தலைமை தாங்கினார். வி.ஐ.டிதுணைத்தலைவர் ஜி.வி.செல்வம் இதில் கலந்துகொண்டார். முன்னதாக இணை துணைவேந்தர் டாக்டர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும், தேசத்தை சரியான திசையில் வழி நடத்துவ தற்கும் இந்திய நாடே இளைஞர்களை நோக்கி பார்த்து கொண்டிருக்கிறது என்று விழாவில் பேசிய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தெரிவித்தார். இன்றைய இளைஞர்கள் நாட்டில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து நன்கு அறிந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். இன்றைய இளைஞர்களின் திறமைகள் முன்னிலைக்குக் கொண்டு வரு வது மிகவும் முக்கியமானது என்றும், இது போன்ற நிகழ்வுகள் இளைஞர்களின் திறமை யையும் திறனையும் சரியாக அடையாளம் காண உதவும் என்றும் அவர் கூறினார். சமீபத்தில் உலகின் சிறந்த 200 பல்கலைக் கழகங்களைப் பற்றிய செய்தி அறிக்கை யைப் படித்ததாக கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்திய பல்கலைக் கழகம் கூட அதில் இடம்பெறவில்லை. இந்திய பல்கலைக் கழகங்கள் விரைவில் உலகின் சிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இடம்பெறும் என்று அவர் நம்பிக்கை தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் “டெக்ரோனி கல்ஸ்”மாநாட்டு இதழையும் அமைச்சர் வெளியிட்டார்.