tamilnadu

img

பட்ஜெட் அறிவிப்புகளில் ஏமாற்றம் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் அதிருப்தி

சென்னை, மார்ச் 21 - ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் தமிழ்நாடு அர சின் 2023-24 பட்ஜெட் நிறைவேற்ற வில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் அ.செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “மீண்டும் பழைய ஓய்வூதியம்; சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம், 21 மாத ஊதிய நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட சரண்டர், நிலுவை அகவிலைப்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், அரசாணை எண்.115,139, 152 அவுட்சோர்சிங், ஒப்பந்தக்கூலி அரசு ஆணையை முற்றிலும் ரத்து செய்வது அரசுத் துறைகளில் உள்ள 6  லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பு தல் உள்ளிட்ட - முதல்வர் அளித்த வாக்கு றுதிகள் எவையும் பட்ஜெட்டில் இடம்பெறாதது வஞ்சகமானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பட்ஜெட்டில் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 21.03.2023 அன்று அனைத்து அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 28.03.2023 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம், 19.04.2023 அன்று தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சென்னையில் கூடி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வலி யுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்திடுவது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனம் எப்போது?

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ச.மயில் விடுத்துள்ள அறிக்கையில், “பல்வேறு அரசுத் துறைகளின் நிர்வா கத்தின் கீழ் இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீர மைப்புப் பள்ளிகள், இந்து சமய அற நிலையத்துறைப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள் ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதாக வெளி யிட்டுள்ள அறிவிப்பு சரியானது; அப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கள், விடுதி வசதி, அப்பள்ளிகளுக்கு கிடைத்து வந்த நிதிகள் மற்றும் அப் பள்ளிகளில் குறிப்பிட்ட  பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த முன்னுரிமை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.  மேலும், தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மாந கராட்சிப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வி த்துறை நிர்வாகத்தின்கீழ் கொண்டுவர வேண்டும். மேலும், முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவி களுக்கு மாதந்தோறும் வழங்கும் ஊக்கத்தொகை ரூ.1000/- ஆகியவை வரவேற்கத்தக்க திட்டங்கள். இவற்றை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தி இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் நியமனம், பணியாளர்கள் நியமனம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லா தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள் ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சத்துணவு ஊழியர்கள் ஏமாற்றம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். கலா, பொதுச் செயலாளர் ஆ.மலர்விழி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரி வித்துள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி  காலமுறை ஊதியம் வழங்குவது, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதி யம் வழங்குவது, தற்போது உள்ள குறைந்தபட்ச  ஓய்வூதியம் ரூ. 2000 என்பதை மாற்றி  ரூ. 9,000ஆக உயர்த்தி வழங்குவது, பணி ஓய்வு பெறும் நாளில் ஒட்டுமொத்த தொகையாக சத்துணவு ஊழியர்களுக்கு ரூபாய் 5  லட்சம் வழங்குவது, எரிவாயு சிலிண்ட ருக்கான மானியத்தை உயர்த்தி வழங்குவது, சத்துணவு திட்டத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து அறிக்கையில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ள னர். தொடர் போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள்

அரசு/அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற நிதி சாரா கோரிக்கை பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்த்து இருந்த  பத்தாயிரம் இடைநிலை ஆசிரியர் களுக்கு  ஏமாற்றமாக அமைந்துள்ளது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் கூறியுள்ளார்.

ஓய்வூதியர் சங்கம்

தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு  பட்ஜெட்டில் ஆசிரியர் - அரசு ஊழியர் களின் கோரிக்கைகள் எதுவுமே இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்பட எந்தத் திட்டமும் அறிவிக்கப் படாதது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பெருமை கொள்ள நியாயம் இல்லை

தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவர் கு.வெங்க டேசன், செயலாளர் சு.அரிசங்கர் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், “2023ஆம் ஆண்டில் 2000க்கும் குறைவான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இலக்கானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தினால் அறிவிக்கப்பட்டுள் ளது. பணியாளர்களின் பணிமூப்பு குறித்தான உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக, தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவி யாளர் நிலையில் ஓராண்டிற்கு மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்ப தற்கான அரசின் நிலைப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தலைமைச் செயலகத்தை பொறுத்தவரையில், கடும் இட நெருக்கடி உள்ள நிலையில், அதைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை. பதவி உயர்வுகள் எந்தவித தாமதமுமின்றி உரிய தேதியில் வழங்கப்படும் என்ற அரசின் கொள்கை அறிவிப்பும் வெளி யிடப்படவில்லை. மேலும், அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியை ஆறு மாத காலம் காலந்தாழ்த்தி நிலுவைத் தொகையை மறுத்து, அதோடு 15 நாட்கள் சரண் விடுப்பு சலுகையை பறித்து, அதன் மூலம் ஈட்டிய வருவாயைக் கொண்டு, வருவாய் பற்றாக்குறை குறைந்து விட்டது என்று பெருமை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? 4 லட்சத்திற்கும் மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல், படித்து விட்டு அரசின் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவை இருளாக்கி, அதன் மூலம் மிச்சப்படுத்தும் வரு வாயைக் கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது சமூகநீதிக்கு எதிரானதல்லவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.