சென்னை, மே 13-வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய கனமழையோ பெய்யக்கூடும் என்றும் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, சேலம், நாமக்கல், கரூர், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மழை பெய்யாத இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.