tamilnadu

img

கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின் போது  கிரேன் விழுந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்களது உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.