tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நா.புகழேந்தி மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். மாணிக்கராஜ்,  இ. ரவிக்குமார், வி. தனராஜ், வ. சின்னசாமி, எ. இராமகிருஷ்ணன், அ. கணேசமூர்த்தி , சு. சிவராமன், வேணுகோபால், ஆ.கு,மீ.அம்பழக இரா.ம.வீரப்பன், இரா.இந்திரகுமாரி, எச்.எம்.ராஜூ, சி.வேலாயுதன், தா.மலாவன், தா.இராசாம்பாள், மொ.பரமசிவம், இராமநாதன் உள்ளிட்டோர் மறைவுக்கும், குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் விஷச் சாரயம் அருந்தி உயிரிழந்தவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் குறிப்புகளையும், தீர்மானத்தையும் பேரவை தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
இதை தொடர்ந்து, பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்திய பிறகு, கூட்டத்தொடர் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.