tamilnadu

img

இந்தியா கூட்டணியின் வெற்றி மக்களின் கண்களில் தெரிகிறது பிரச்சாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

சென்னை, ஏப். 15 - பாஜக கூறும் கோடி பொய்களைப் போல அது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும் பொய்யானது என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் திங்களன்று (ஏப்.15) மயிலாப்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நந்தனம், ஆழ்வார்பேட்டை, விசாலாட்சி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

கால்முறிவையும் பொருட்படுத்தாமல் திறந்த வாகனத்தில் அமர்ந்தபடி, கடும் வெயிலில் வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பாளருக்கு வழிநெடுகிலும் மாலை அணிவித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரிக்கிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம், புதுச்சேரி யில் 40 தொகுதிகளிலும் கடந்த காலங்க ளில் பெற்ற வாக்குகளை விட கூடு தல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளோம். எங்களுடைய வெற்றி நிச்சயம் என்பது மக்களின் கண்களில் தெரிகிறது” என்றார். “ஏற்கெனவே பாஜக கோடி பொய்களை சொல்லி வருகிறது. அதற்கடுத்த பொய்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. வீடற்ற மக்க ளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடு கள் கட்டித் தரப்படும். வீடு கட்டு வதற்கான பணம் 8.5 லட்சம் ரூபாயை பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த தொகையில் 1.5 லட்சம் ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு கொடுத்துவிட்டு, தங்களது திட்டம் என்று கூறுகிறது. பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகள் நம்பக தன்மை அற்றவை. காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களின் நலன் சார்ந்து வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். இந்த பிரச்சாரத்தில் திமுக தென் மேற்கு மாவட்டச் செயலாளர் தா.வேலு எம்எல்ஏ, பகுதி செயலாளர் நந்தனம் கி.மதி எம்.சி., முரளி, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.