tamilnadu

நவ.23, 24 போராட்டங்களில் ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு பங்கேற்பு

சென்னை, நவ. 22 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் செவ்வாயன்று (நவ.21) திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் கே.கர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், ஒப்பந்தப்படி ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வியாழனன்று (நவ.23) கழக தலைமைய கங்கள் முன்பும், நவ.24 அன்று சென்னையிலும் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறு கிறது.

போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை நடத்துகிறது. இந்தப் போராட்டங் களில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பும் பங்கேற்கிறது என்று அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் தெரிவித்துள்ளார்.