tamilnadu

6 பேருக்கு இலக்கிய மாமணி விருது

சென்னை,ஜன.25- மரபுத்தமிழ், ஆய்வு தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப் பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான  இலக்கிய மாமணி விருது வழங்கப் பட்டு வருகிறது. இலக்கிய மாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சத்திற்கு காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

அதன்படி, இலக்கிய மாமணி விருது 2022 ஆம் ஆண்டிற்கு மரபுத் தமிழ் விருது கள்ளக்குறிச்சி மாவட்டம் முனைவர் அரங்க. ராமலிங்கம் (68), ஆய்வு தமிழுக்கு விருதுநகர் மாவட்டம்  கொ.மா.கோதண்டம் (83) படைப்புத் தமி ழுக்கு கோவை மாவட்டம் முனை வர் சூர்யகாந்தன் (67), மா.மருதாச் சலம் (67) ஆகியோர் தேர்வு செய்யப் பெற்றுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி  மாவட்டம் மணி அர்ஜுனன் (70),  திருவாரூர் மாவட்டம் அர. திருவிடம் (77), சென்னை க. பூரணச்சந் திரன் (74) ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

2023 ஆம் ஆண்டிற்கு இலக்கிய மாமணி விருதுக்கு கடலூர் மாவட்டம் ஞா. மாணிக்கவாசகன் (94) (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டம் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் (73) (ஆய்வு தமிழ்),  சிவகங்கை மாவட்டம் கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடரா சன் (64) (படைப்பு தமிழ்) ஆகி யோர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.