சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டலம், வார்டு -1க்கு உட்பட்ட நெட்டுக்குப்பம் மற்றும் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்திருக்கும் எண்ணெய் படலங்களை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திங்களன்று (டிச.11) பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.