தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் வெளியிட்ட கணிப்பின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்து இருந்தோம். ஆனால் கணிப்பை விட கூடுதலாக மழை பெய்துவிட்டது. உலகில் உள்ள எந்த நகரங்களாலும் இந்தளவு அதிக மழையை தாங்க முடியாது.