சென்னை, டிச.9- ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண உதவியாக ரூ. 6,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:
“தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற் பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமை யான பாதிப்புகள் ஏற்பட்டன.
உயிரிழப்புக்கு ரூ. 5 லட்சம்
எனவே, மிக்ஜம் புயலால் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத் தால் உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு, இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பயிர்ச் சேத நிவாரணம்
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மழையி னால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர் களுக்கு இழப்பீடு ஹெக்டேர் ஒன் றுக்கு ரூ. 13 ஆயிரத்து 500-லிருந்து, ரூ. 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் படும்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 18 ஆயிரத்தி லிருந்து ரூ. 22 ஆயிரத்து 500- ஆக உயர்த்தி வழங்கப்படும். மழையி னால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானா வாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 410-லிருந்து. ரூ. 8 ஆயிரத்து 500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கால்நடைகளுக்கு நிவாரணம்
மேலும், எருது, பசு உள்ளிட்ட கால் நடைகளின் உயிரிழப்புக்கான நிவா ரணம் 30 ஆயிரத்திலிருந்து ரூ. 37 ஆயி ரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப் புக்கான நிவாரணம் ரூ. 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ. 32 ஆயிரத்திலிருந்து, ரூ. 50 ஆயிரமாக வும், பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு நிவாரணம் ரூ.10 ஆயி ரத்திலிருந்து, ரூ. 15 ஆயிரமாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்ச மாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப் படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 7.50 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த வலைகளுக்கு வழங் கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயி ரமாக உயர்த்தி வழங்கப்படும்.”
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் குடும்ப அட்டைக்கும் ரூ. 6 ஆயிரம் நிவாரணம்
முதல்வர் அறிவித்துள்ள ரூ. 6,000 நிவாரண உதவித்தொகை தனிநபர் குடும்ப அட்டைக்கும் கிடைக்குமா? என்று மக்களுக்கு கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, தனி நபர் குடும்ப அட்டைக்கும் வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகை வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலை செய்யாத ஏடிஎம்கள்
சென்னை, புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என புகார்கள் வந்துள்ளதாலும், நிறைய ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதாலும் நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படு கிறது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம்
‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின்கட்ட ணம் செலுத்த அவகாசம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில், மின் கட்ட ணத்தை அபராதத் தொகை இல்லா மல் செலுத்த அறிவிக்கப்பட்ட இந்த கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர் களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.