சென்னை, பிப். 19 - 2024 - 25 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்ன ரசு திங்களன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024-ஆம் ஆண்டுக் கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 அன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.பிப்ரவர் 19 அன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, திங்களன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடிய நிலையில், 2024–25 நிதி யாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி யமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
‘சமூக நீதி, கடைக்கோடித் தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொரு ளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும்’ என 7 முதன்மையான நோக்கங் களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
மக்கள் நலத் திட்டங்கள்
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2 சதவிகித மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ரூ. 27,000 கோடியில் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம்... வீடற்றவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3,500 கோடி செலவில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள். 2024-25இல் மட்டும் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள். ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு.
உள்கட்டமைப்பு
ரூ. 665 கோடியில் 14 புறவழிச்சாலைகள், உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை ரூ. 4,567 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும்.சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கான முழுச் செலவையும் (ரூ. 12 ஆயிரம் கோடி) அரசே ஏற்கும். ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். தூத்துக்குடியில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப் படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 1000 கோடி. ரூ. 450 கோடியில் தூண்டில் வளை வுகள், மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.குமரி, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம். பூந்தமல்லியில் ரூ. 500 கோடியில் அதிநவீன திரைப்பட நகரம்.
n ரூ. 27,000 கோடியில் வறுமை ஒழிப்புத் திட்டம்
n 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
n அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப்பணி
n கோவையில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
n தஞ்சாவூரில் ரூ. 120 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா
n அரசு உதவி பெறும் ஊரக பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி
n மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை
n ரூ.500கோடியில் மாநிலம் முழுவதும் 5000 நீர்நிலைகள் புனரமைப்பு
n புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் - 500 மின் பேருந்துகள் கொள்முதல்
n பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீன திரைப்பட நகரம்.
ஆறுகள், நீர்நிலைகள் புனரமைப்புகள்
காவிரி, நொய்யல், வைகை, தாமிரபரணி ஆறு களை சீரமைக்க நடவடிக்கை. ரூ. 500 கோடியில் மாநிலம் முழுவதும் 5000 நீர்நிலைகள் புன ரமைக்கப்படும். ரூ. 365 கோடியில் 2 ஆயிரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்படும். வானிலை குறித்த தகவல்களை துல்லியமாக சேகரிக்க ரூ. 56 கோடியில் 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்.
தொழில்துறை மேம்பாடு
கோவையில் ரூ. 1,100 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா. தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நியோ டைடல் பார்க். தஞ்சாவூரில் ரூ. 120 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்பூங்கா. மதுரையில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில், 26 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம்.. கோயம்புத்தூர் மாவட்டம் குறிஞ்சி தொழிற்பேட்டை யில், குறுந்தொழில் முனைவோர் உட னடியாக தொழில் துவங்க ரூ. 37 கோடி மதிப்பீட்டில் ஆயத்த தொழில் வளாகம் (Plug and Play). மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் ரூ. 118 கோடி மதிப்பீட்டில், 5 ஏக்கர் நிலப் பரப்பில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம். ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டியில் ரூ. 32 கோடியில் 3 புதிய தொழிற்பேட்டை கள். கரூர், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களில் ரூ. 20 கோடியில் சிறிய ஜவுளிப் பூங்காக்கள். அனைத்து சிப்காட் தொழிற்பேட்டைகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு மையம்.
இளைஞர் நலன் - வேலைவாய்ப்பு
அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப்பணி. 500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்த வரை பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகி தம் ஊதிய மானியம். ஒன்றிய அரசுப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 1000 பேருக்கு சென்னை, கோவை, மதுரையில் ரூ. 6 கோடியில் உறைவிடப் பயிற்சி மையம் அமைக்கப்படும். இளைஞர்களின் கலைதிறமைகளை வெளிக்கொணர மாநிலம் முழுவதும் இளைஞர் திருவிழாக்கள். சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள். இராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும்.
மகளிர் நலன்
புதிதாக 10 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்க ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு... சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய நகரங்களில் 345 மகளிர் பயன்பெறும் வகையில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய ‘தோழி விடுதி கள்’. ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்.புதிதாக 3 ஆயிரம் பேருந்துகளும், 500 மின் பேருந்து களும் வாங்கப்படும்... மலைக் கிராமங்களுக்கும் மகளிர் கட்டண மில்லா பேருந்து இயக்கப்படும்...
மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் நலன்
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரி, விடுதி கட்டணம் என முழுச்செலவை யும் அரசே ஏற்றுக்கொள்ளும். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள். மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் ரூ. 25 கோடியில் அமைக்கப்படும்
மாணவர்களுக்கான திட்டங்கள்
கல்வித்துறையில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்... 1 லட்சம் மாண வர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும். ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் உரு வாக்கப்படும்.. ஊரகப் பகுதிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர் களுக்கு ரூ. 600 கோடி செலவில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படுகிறது. 6 முதல் 12 வரை அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும். மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும், ‘புதுமைப்பெண்’ திட்டம், அரசு உதவிபெறும் பள்ளி களில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
செவ்வாயன்று வேளாண்மைக் கென தனியாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த நிநிநிலை அறிக்கை யைத் தாக்கல் செய்கிறார்.
சவால்கள் நிறைந்த சூழலிலும் மக்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கை இது. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு மாநில அரசுகளின் வருமானம் குறைந்துள்ள நிலையில், சிறந்த முறையில் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர், ஒப்பந்த முறை, தொகுப்பூதிய - காலமுறை ஊதிய தொழிலாளர் மற்றும் சிறு-குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட பகுதியினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)