tamilnadu

சிதம்பரம் அருகே மாணவர் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் புகார்

சிதம்பரம் அருகே மாணவர்  மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் புகார்

சிதம்பரம், ஜூன் 12- சிதம்பரம் அருகில் உள்ள ஆணையங்  குப்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் சந்திரயோகேஷ்  உயி ரிழந்த சம்பவத்தில், ஆன்லைன் வீடியோ கேம் தொடர்பு உள்ளதாக பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ராஜகோபாலின் மகன் சந்திரயோகேஷ், சிதம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்ஈ பாடத்தில் 11 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புக்கு சென்றுள்ளார்.  விடுமுறை முடிந்து ஜூன் 11 ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில், ஜூன் 10 ஆம் தேதி இரவு பெற்றோர்களுடன் இயல்பாக பேசிவிட்டு தனது அறைக்கு தூங்கச் சென்ற சந்திரயோகேஷ், மறுநாள் காலையில் கழுத்தில் பாலித்தீன் பை கட்டி, தலையை மூடி டேப் ஒட்டி, நச்சு வாயுவை செலுத்தி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிறகு, இதுகுறித்து பரங்கிப்பேட்டை காவல்  நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணனின்  உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், “ஜூன் 10 ஆம் தேதி பகலில் மகனின் தொலைபேசியில் அதிக அழைப்புகள் வந்தன. போனை துண்டித்துக் கொண்டிருந்தார். யார் தொடர்ந்து அழைக்கிறார்கள் எனக் கேட்டபோது ஏதோ சொல்லி சமாளித்தார். இரவு இயல்பாகவே தூங்கச் சென்றார். ஆனால் காலையில் இறந்த நிலையில் கண்டோம். மேலும் அவர் பயன்படுத்திய தொலைபேசியில் அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளன.  எனவே, ஆன்லைன் கேம் விளை யாட்டில் அடிமையாகி, அவர்கள் கூறும் சவால்களுக்கு ஏற்ப தற்கொலை செய்துகொண்டாரா?  என்பதை அவரது தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வு மற்ற மாணவர்களுக்கு நடக்கக்கூடாது என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்