சென்னை, செப். 6- இடுப்பு எலும்பு முறிந்த 93 வயது முதியவருக்கு சிக்க லான அறுவை சிகிச்சை சென்னையில் உள்ள போர் டிஸ் மலர் மருத்துவமனை யில் செய்யப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்த குமார் சுந்தரம் தலைமையி லான மருத்துவக் குழுவினர், ஆராவமுதன் என்னும் 93 வயது முதியவருக்கு ப்ராக்சி மல் பெமரோல் நெயில் என்னும் தொடையில் சிறிய துளையிட்டு அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறையை 6 மணி நேரம் மேற்கொண்டனர். இந்த சிகிச்சையை தொடர்ந்து அந்த முதியவர் அன்றைய தினமே எழுந்து நடந்தார். தற்செயலாக கீழே விழுந்த அந்த முதியவருக்கு வலது இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடும் வலியால் அவதிப்பட்ட அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவ ருக்கு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டி ருப்பதை கண்டறிந்தனர். இருதய நோய் மற்றும் சிறு நீரக நோய் உள்ளிட்ட டாக் டர்கள் குழுவின் ஆலோச னைக்கு பிறகு அவர் அன்றைய தினமே அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வயது, இதயம், சிறுநீரக செயலிழப்பு, நீரி ழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு சிறப்பு நிபுணர்கள் குழு பாதுகாப்புடன் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தது.